பிளஸ் 2 கணினி அறிவியல் தேர்வில் மொத்தம் 150க்கு 75 மதிப்பெண் வினாக்கள் 'அப்ஜெக்டிவ்' வகையாகவும், 75 மதிப்பெண் வினாக்கள் 'தியரி'யாகவும் கேட்கப்படும். முதல் 75 வினாக்களுக்கான விடைகளை தேர்வு அறையில் வழங்கப்படும் ஓ.எம்.ஆர்., ஷீட்டில் கருப்பு மை பால் பாயின்ட் பேனாவால் நிரப்ப வேண்டும். இப்பகுதியை மாணவர்கள் எழுதுவதற்கு கடந்தாண்டு முதல் 90 நிமிடங்கள் வழங்கப்பட்டன.
ஆனால் நேற்று நடந்த தேர்வில் 'ஓ.எம்.ஆர்., ஷீட்'டில் ஒரு மதிப்பெண் பகுதிக்கு '75'
நிமிடங்கள்' என குறிப்பிடப்பட்டதால் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.
ஒரு மதிப்பெண் பகுதிக்கு 90 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும், என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், '75 நிமிடங்கள்' என அச்சிடப்பட்டிருந்ததால், ஆசிரியர்களும் குழப்பமடைந்தனர்.
சென்னை தேர்வுத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, 'நேரம் தவறாக அச்சிடப்பட்டதாகவும், 90 நிமிடங்கள் தான் வழங்க வேண்டும். அதன் பின் ஓ.எம்.ஆர்., ஷீட்டை மாணவர்களிடம் அறை கண்காணிப்பாளர் பெற வேண்டும்,' என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நிமிடங்கள்' என குறிப்பிடப்பட்டதால் மாணவர்களுக்கு குழப்பம் ஏற்பட்டது.
ஒரு மதிப்பெண் பகுதிக்கு 90 நிமிடங்கள் ஒதுக்க வேண்டும், என தெளிவாக குறிப்பிடப்பட்டிருந்த நிலையில், '75 நிமிடங்கள்' என அச்சிடப்பட்டிருந்ததால், ஆசிரியர்களும் குழப்பமடைந்தனர்.
சென்னை தேர்வுத்துறை அதிகாரிகளிடம் இதுகுறித்து கேட்டபோது, 'நேரம் தவறாக அச்சிடப்பட்டதாகவும், 90 நிமிடங்கள் தான் வழங்க வேண்டும். அதன் பின் ஓ.எம்.ஆர்., ஷீட்டை மாணவர்களிடம் அறை கண்காணிப்பாளர் பெற வேண்டும்,' என வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.